அவசரச் சட்டம் வாபஸ்: பிரதமர் பதவி, கேபினட் மீதான புனிதத்தன்மை கேள்விக்குறியானதே..

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எம்.பி, எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை இழக்க நேரிடும். ஆனால் இத்தீர்ப்பை செயல்படுத்தாமல் இருக்க மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி, மிலிந்த தியாரோ உள்ளிட்டோர் கடுமையாக இந்த அவசர சட்டத்தை எதிர்த்தனர். பாரதிய ஜனதாவும் எதிர்த்து ஜனாதிபதியிடம் மனு கொடுத்தது.
இந்நிலையில் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்த சட்டத்தை திரும்பப் பெற முடிவு எடுத்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார், இத்தகைய முடிவுகளால் பிரதமர் பதவி மற்றும் அமைச்சரவை ஆகியவற்றின் புனிதத் தன்மை என்பது கேள்விக்குறியாகிவிடுகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
இந்த அவசர சட்டத்தை திரும்பப் பெறக் கூடாது என்று தொடக்கம் முதல் வலியுறுத்தி வந்தவர் சரத் பவார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications