குடும்ப தகராறில் கணவன் தற்கொலை: தூண்டியதற்காக மனைவி மீது வழக்கு பதிவு
தானே: கணவன் தற்கொலை செய்து கொண்டதற்காக மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் நடந்துள்ளது.
தானே மாவட்டத்தின் பந்தன் என்ற கிராமத்தில் வசித்தவர் சஞ்சய் அனந்தபட்வாலே (40). இவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்வது வழக்கமாம். இதனால் கணவன், மனைவி வாழ்க்கையில் நிம்மதி பறிபோனது.
மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சஞ்சய், நேற்று தனது வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரின் சகோதரி, விக்ரம்காத் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், தனது சகோதரனின் மனைவியின் தவறான நடத்தையால் ஏற்பட்ட மன உளைச்சலால் சகோதரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்ட, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் நந்தவால்கர், தற்கொலை செய்தவரின் மனைவி மீது, சட்டப்பிரிவு 306-ன்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக இந்த பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எந்த நேரத்திலும் அந்த பெண் கைது செய்யப்பட கூடும்.