Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை எரித்துக் கொன்று நகை, பணம் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வயதான பெண் ஒருவர் கொள்ளையர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நரேந்திர சிங். அவரின் மனைவி சரோஜ். நேற்று இரவு நரேந்திர சிங் வெளியே சென்றிருந்தார். சரோஜ் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர்.

அவர்கள் சரோஜை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனர். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் முன்பு சரோஜை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். வெளியே சென்ற நரேந்திர சிங் வீடு திரும்பியபோது தனது மனைவி எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரோஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். வயதான பெண் ஒருவர் கொள்ளையர்களால் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+