சொன்னீங்களே, செஞ்சீங்களா?: வீட்டில் டாய்லெட் கட்டாததால் திருமணத்தை நிறுத்திய பெண்

Subscribe to Oneindia Tamil

கான்பூர்: உத்தர பிரதேசத்தில் மணமகன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திவிட்டு கழிப்பறையுடன் கூடிய வீடு உள்ளவரை மணந்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் நேஹா. அவருக்கும் உள்ளூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணகனின் வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே திருமணம் செய்வேன் என நேஹா தெரிவித்துள்ளார்.

Woman calls off wedding as groom failed to build toilet at home

அதற்கு அவர்கள் திருமணத்திற்கு முன்பு கழிப்பறையை கட்டிவிடுகிறோம் என்று கூறிவிட்டு செய்யவில்லை. இதை தெரிந்து கொண்ட நேஹா திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கையில் திருமணத்தை நிறுத்தினார்.

நேஹா மற்றும் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிக்கு உள்ளூர் என்.ஜி.ஓ. ஒன்று ஏற்பாடு செய்தது. இந்நிலையில் நேஹா திருமணத்தை நிறுத்தியது குறித்து அறிந்து அந்த என்.ஜி.ஓ. கவலை அடைந்தது.

உடனே நேஹாவின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். தேர்வு செய்யப்பட்ட 5 மாப்பிள்ளைகளில் கழிப்பறையுடன் கூடிய வீடு வைத்துள்ள சர்வஷை நேஹா தேர்வு செய்தார். இதையடுத்து அவர்களின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+