கர்ப்பம் எனக் கருதி 40கி கல்லை 2 வருடம் வயிற்றில் சுமந்த சண்டீகர் பெண்
Subscribe to Oneindia Tamil
அம்பிகாபூர்: கர்ப்பம் எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு, வயிற்றில் சுமார் இரண்டாண்டுகளாக 40கிலோ கல் ஒன்றைச் சுமந்துத் திரிந்துள்ளார் சண்டீகர் பெண் ஒருவர்.
சண்டிகரைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் வயிற்றில் கடுமையான வலி இருப்பதாகக் கூறி, மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவரது வயிற்றைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் கல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாக வயிற்றில் அந்தக் கல்லுடன் இருந்துள்ளார் அப்பெண். மருத்துவர்கள் விசாரித்ததில் வயிறு வீங்கி இருப்பதற்குக் காரணம் கர்ப்பம் என அவரது குடும்பத்தார் புரிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அறுவைச் சிகிச்சை மூலம் அக்கல் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட அக்கல்லின் எடை சுமார் 40 கிலோ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications