பேசிக்கொண்டு இருக்கும் போதே தீ வைத்தார்கள்.. உ.பியில் கந்து வட்டி கொடுமையில் கொளுத்தப்பட்ட பெண்
20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
லக்னோ: 20,000 கடன் தொகையை கொடுக்காததால் உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அந்த பெண் அங்கு இருக்கும் எல்லோருக்கும் முன்னிலையில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்.
ரேஷ்மி என்று அந்த பெண் தற்போது உயிர் பிழைத்து இருக்கிறார். மிகவும் மோசமான நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

எவ்வளவு கடன்
ரேஷ்மி தலித் பெண். அதே பகுதியை சேர்ந்த பெரிய கந்துவட்டி குழுவிடம் இவர் கடன் வாங்கி இருக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப விழா ஒன்றிற்காக 20 ஆயிரம் வாங்கி இருக்கிறார்.

வட்டி கொடுத்தார்
இவர் கடந்த மூன்று மாதமாக சரியாக வட்டி கொடுத்து வந்துள்ளார். இந்த மாதமும் வட்டி கேட்ட போது கொடுத்துள்ளார். ஆனால் அந்த கந்து வட்டி குழுவின் ஆட்கள் அசலை கேட்டு அந்த பெண்ணை அடித்து இருக்கிறார்கள்.

தீ வைத்தார்கள்
இந்த நிலையில் அந்த பெண்ணை தெரு வரை தரதரவென இழுத்து வந்துள்ளார்கள். அதேபோது எல்லோரும் பார்க்கும் வகையில் அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். அந்த எரியும் வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து தப்பித்து இருக்கிறார்கள்.

மோசம்
தற்போது இவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 60 சதவிகிதம் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. பேசிக்கொண்டு இருக்கும் போது தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள் என்று அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications