Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷீனா வழக்கை ஆரூஷி வழக்கு போன்று ஆகவிட மாட்டேன்: மும்பை போலீஸ் கமிஷனர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷீனா போரா கொலை வழக்கை ஆரூஷி கொலை வழக்கு போன்று ஆகவிட மாட்டோம் என மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் காவல் இன்றுடன் முடிகிறது.

Won't let Sheena Bora murder case to turn into 'Aarushi' case, says Rakesh Maria

இந்நிலையில் இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் ஷீனா போரா கொலை வழக்கை டெல்லி ஆரூஷியின் வழக்கு போன்று ஆகவிட மாட்டேன் என்றார்.

டெல்லியைச் சேர்ந்த ஆரூஷி அவரது தாய், தந்தையால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வழக்கு இன்னும் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது.

ஷீனா வழக்கில் அவரது தாய் இந்திராணி விசாரணையில் ஒத்துழைப்பு வழங்காமல் அடம்பிடித்து வருகிறார். தனது மகளை கொலை செய்ததாக கடந்த செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்ட அவர் தற்போது அதை மறுக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+