10 நாளில் அரசு வேலை வேண்டும்... போராட்டத்தில் குதித்த உலகக் கோப்பை வென்ற ஜார்கண்ட் கபடி வீராங்கனை
பொகாரோ: அரசு அளித்த வாக்குறுதியின் படி, அரசு வேலை வழங்காவிட்டால், குடும்பத்துடன் போராட்டத்தில் குதிப்பேன் என எச்சரித்துள்ளார் பெண்கள் கபடியில் உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஜார்கண்ட் கபடி வீராங்கனையான விந்தியாவாசினி.
கிரிக்கெட் கடவுள் எனப் புகழப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டு சில நாட்கள் கூட ஆகவில்லை ஆனால், உலகக் கோப்பையை வென்ற கபடி அணியில் விளையாடிய ஜார்கண்ட் வீராங்கனை ஒருவர் தனக்கு உரிய பணி வழங்கவில்லை எனப் போராட்டத்தில் குதித்துள்ளார்.
இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு வழங்கப் படுகிற அங்கீகாரமும், அந்தஸ்தும் பிற விளையாட்டுகளுக்கு வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இன்னமும் நிலவி வருகிறது. அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் கபடி வீராங்கனை ஒருவர், அரசு தனக்கு வேலை வழங்க வேண்டும் எனக் கூறி நேற்று ஒருநாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

உலகக் கோப்பை....
கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக்கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றிப்பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கணைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு வேலை வாக்குறுதி....
அந்த பெண்கள் கபடி அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கணை விந்தியாவாசினியும் ஒருவர். விந்தியாவாசினியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ஆசு வேலை அளிப்பதாக அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டா உறுதியளித்தார்.

ஏமாற்றமே பரிசு....
ஆனால் ஆட்சி மாறியதே தவிர காட்சி மாறவில்லை. அதையடுத்து ஆட்சிக்கு வந்த ஹேமந்த் சோரனும் இரண்டு முறை வேலை கொடுப்பதாக விந்தியாவாசினிக்கு உறுதியளித்தாராம். ஆனால், வேலைக்குப் பதிலாக விந்தியாவாசினிக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.

ஒருநாள் தர்ணா....
நான்கு சகோதரிகளுடன் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வரும் விந்தியாவாசினி பொறுமையிழந்து நேற்று வேலை கேட்டு பொகாரோ துணை கமிஷனர் அலுவலகம் முன்பு ஒரு நாள் தர்ணா நடத்தினார்.

குடும்பத்துடன் போராட்டம்....
தனது போராட்டம் குறித்து விந்தியாவாசினி கூறும்போது, ‘சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெறுபவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்று அரசின் கொள்கை இருக்கிறது. ஆனால், இவர்கள் எனக்கு வேலை தர மறுத்து வருகிறார்கள். அவர்கள் கொடுத்த வாக்குறுதியை இன்னும் 10 நாட்களில் நிறைவேற்றாவிட்டால், எனது குடும்பத்துடன் தலைநகர் ராஞ்சியில் போராட்டம் நடத்துவேன்' எனத் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications