பரபரப்பான சூழலில் அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்திய முதல்வர் எடியூரப்பா!
கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் முதல்வர் எடியூரப்பா அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
பெங்களூரு கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில் முதல்வர் எடியூரப்பா அமித்ஷாவுடன் போனில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
எடியூரப்பா அரசு மீது கர்நாடக சட்டசபையில் இன்னும் சற்றுநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதனால் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் இதனை உற்று நோக்கி வருகிறது.
இதுவரை பாஜகவுக்கு போதுமான எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்காததால் பாஜக ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முன்கூட்டியே தனது முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது.

அடுத்து என்ன?
இதற்காக 13 பக்க ராஜினாமா உரையை எடியூரப்பா தயாரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அடுத்து என்ன என்ற பரபரப்போடு கர்நாடக அரசியல் களம் நகர்ந்து வருகிறது.

பரபரப்பான சூழலில் ஆலோசனை
இந்நிலையில் இந்த பரபரப்பான சூழலில் முதல்வர் எடியூரப்பா பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் போனில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து விளக்கினார் எடியூரப்பா.

பாஜகவினர் சந்தேகம்
எடியூரப்பா அறையில் பாஜகவினர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி கிடைக்குமா என்று பாஜகவினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர் சந்திப்பு
முதல்வர் எடியூரப்பா சட்டசபையில் ஒரு மணிநேரம் பேசிவிட்டு ராஜினாமாவை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முரளிதர் ராவ் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications