புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைத்தது பாஜக அரசுதான்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பாஜக ஆட்சி காலத்தில்தான் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக செல்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை பாஜக மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தது கிடையாது. யோகி ஆதித்யநாத்தான் தற்போது இந்த சாதனையை செய்திருக்கிறார். இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக பாஜக பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகியவை உத்தரப் பிரதேச அரசு மீது கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு எதுவும் உ.பியில் நடக்கவில்லை. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில்தான் நடைபெற்றது. ஆனால் தற்போது முதல் முறையாக உ.பியில் இந்த மாநாடு நடைபெற்றிருப்பது அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களுக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டி வருகிறார். அதேபோல முடிவுற்ற பல திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேச மக்கள், தலைவிதியை மட்டும் நம்பிக்கொண்டிருந்த காலம் இருந்தது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சாலைகள் போடப்பட்டால் இதுதான் தங்கள் தலைவிதியென நினைத்து அதனை மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இன்று, ஒரே நாளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வரும் போது மக்களின் நம்பிக்கை வலுப்பெறும். அவர்கள் தங்கள் தலைவிதியை மட்டுமல்லாது தங்களது உழைப்பையும் நம்புவார்கள்.
புதிய நம்பிக்கை, புதிய வேலை வாய்ப்புகள்தான் உத்தரப் பிரதேச அரசின் குறிக்கோள் ஆகும். கோரக்பூரை பொறுத்த அளவில் இங்குள்ள விமான நிலையம் விரிவடைந்து வருகிறது. தற்போது 14க்கும் அதிகமான விமான நிலையங்கள் இயக்கப்பட இருக்கின்றன. எய்ம்ஸ், உரத் தொழிற்சாலை, நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலையும் கோரக்பூரில் விரைவில் அமைய இருக்கின்றன. அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோரக்பூரில் அதிக அளவு முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். பெரிய வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பார்க்குகள் ஆகியவை கோரக்பூரில் அமைய இருக்கிறது.
இதைவிட முக்கியமான விஷயம் என்னவெனில் நம்முடைய மாநிலத்திலிருந்து ஏராளமான அளவில் இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக வேலைக்கு சென்றிருந்தனர். பாஜக பொறுப்பேற்று 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. உள்ளூரில் உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு போதுமான அளவில் இருப்பதால் அவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்வது குறைந்துள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications