கல்லூரியில் வெடிகுண்டு பீதி கிளப்பிய வாலிபர் கைது: கொலை செய்ததாகவும் ஒப்புதல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு நேற்று இரவு 7 மணி அளவில் போனில் பேசிய மர்ம நபர் திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நள்ளிரவில் குண்டு வெடிக்கும் என தெரிவித்து விட்டு போனை துண்டித்தார்.
இதையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் தனிஷ்லால், பாண்டி, சிவசண்முகம், சிறப்பு எஸ்ஐ வைரவன் மற்றும் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், கைரேகை நிபுணர்கள், உளவுத்துறையினர் நள்ளிரவில் தனியார் கல்லூரிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர், இதில் திருச்செந்தூர் அருகே உள்ள நடுநாலுமூலை கிணறு கிராமத்தில் உள்ள செல்போன் கோபுரத்தில் இருந்து அழைப்பு போனது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த காந்தி மகன் பாலமுருகன், இவரது நண்பர் பொன்பாண்டி மகன் கதிரேசன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி -திருச்செந்தூர் மெயின் ரோட்டிலிருந்து ராணிமகாராஜபுரம் செல்லும் பாதையில் நின்ற பாலமுருகனை தனிப்படையினர் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் திருச்செந்தூர் அருகே உள்ள ராணிமகாராஜபுரத்தை சேர்ந்த பூக்கடை ஊழியரான முருகானந்தம் என்பவரை கொலை செய்ததாக போலீசாரிடம் பாலமுருகன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது. தொடர்ந்து தலைமறைவாக உள்ள கதிரேசனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் வெடிகுண்டு பீதி கிளப்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications