முத்தம் தர விடாமல் தடுத்தார்.. அதான் தள்ளிவிட்டேன்.. மாணவியை கொன்ற இளைஞன் திடுக் வாக்குமூலம்!

பள்ளி மாணவியை கொன்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

ஜபல்பூர்: முத்தம் தர என்னை விடவே இல்லை.. அதான் கீழே தள்ளி விட்டேன்.. என்று பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் ஜாபல்பூர் பகுதியை சேர்ந்த மாணவி பிங்கி. இவருக்கு வயது 18. அங்குள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

Youth killed school girl and arrested in Jabalpur

இவர், தன்னுடைய ஆண் நண்பருடன் போன வியாழக்கிழமை, பிஜாபுரி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். ஆனால் அதற்கு பிறகு வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை. இதனால் பதட்டமும், பயமும் அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் மாணவியை தேடி பார்த்தும், கடைசியில் போலீசில் புகார் தந்தனர்.

அதனடிப்படையில் போலீசாரும் மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில், மாணவியின் சடலம் அந்த காட்டுப்பகுதிக்குள் கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். உடம்பெல்லாம் மாணவிக்கு காயம் இருந்தது. தலையின் பின்பக்கம் பயங்கரமாக அடிபட்டு ரத்தம் உறைந்திருந்தது.

உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் ஆண் நண்பர் ராமன் சிங் சயான் என்பவர் சிக்கினார். இவருடன்தான் மாணவி காட்டுப் பகுதிக்கு சென்றிருக்கிறார். அங்கு யாருமில்லாத தனிமையை பயன்படுத்தி கொண்ட ராமன் சிங் சயான், மாணவிக்கு முத்தம் தர முயன்றுள்ளார்.

ஆனால் மாணவி அதை தடுத்து, மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமன்சிங், மாணவியை கீழே பின்பக்கமாக தள்ளிவிட்டுள்ளார். இதில் அவரது தலை அங்கிருந்த ஒரு பெரிய கல்லில் பட்டு பலத்த காயமடைந்து, அங்கேயே உயிரிழந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ராமன்சிங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+