லக்வி விடுதலை.. தெஹ்ரிக் தலிபான்கள், இந்தியாவுடன் 'யுத்தத்துக்கு' தயாராகிறது பாகிஸ்தான்?
டெல்லி: மும்பை தாக்குதல் வழக்கின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஷகி உர் ரஹ்மானை ஜாமீனில் விடுவித்திருப்பதன் மூலம் இந்தியா மற்றும் தெஹ்ரிக் இ தலிபான்களுடன் உக்கிர யுத்தத்துக்கு பாகிஸ்தான் தயாரகிவிட்டதாகவே பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2002ஆம் ஆண்டு லஷ்கர் இ தொய்பாவின் மிகப் பெரிய பயிற்சி முகாமான முர்டிக் முகாமில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏனெனில் லஷ்கர் இ தொய்பாவின் தலைவரான ஹபீஸ் சயீத்தை கொல்வதற்கான சதி முயற்சி முன்னர் நிகழ்ந்து என்பதால்தான் அந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..

தெஹ்ரிக் இ தலிபானைப் பொறுத்தவரையில் ஹபீஸ் சயீத்தின் மரணம் பெரும் உத்வேகமாக இருக்கும் எனக் கருதுகிறது. ஏனெனில் தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து மும்முரமாக போரிடுவது லஷ்கர் இ தொய்பாதான்.. தெஹ்ரிக் இ தலிபானை ஒழிக்கும் போரில் பல முறை ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து போரிட்டும் இருக்கின்றனர்.
தெஹ்ரிக் இ தலிபானைப் பொறுத்தவரையில் லஷ்கர் இ தொய்பா என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவு என்றுதான் கருதுகிறது. இத்தனைக்கும் மூளையாக இருப்பது ஹபீஸ் சயீத் என்றே தெஹ்ரிக் எண்ணுகிறது. இதனால்தான் சயீத் ஒழிக்கப்பட்டால் லஷ்கர் இ தொய்பா சிதைந்து போகும் என தெஹ்ரிக் கருதுகிறது.
லஷ்கர் இ தொய்பா எப்போதும் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ரொம்பவே விசுவாசமான அமைப்பு. அத்துடன் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவத்துக்காக போராடவும் தயாரான இயக்கம்தான் லஷ்கர் இ தொய்பா.
இந்த நிலையில் ஷகி உர் ரஹ்மான் லக்வி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 1990களில் இருந்து லஷ்கர் இ தொய்பாவின் கட்டளை தளபதியாக இருப்பது லக்விதான்.
இந்தியாவுக்கு எதிரான மோதல்களில் எந்த ஒரு அச்ச உணர்வுமே இல்லாமல் மிக மோசமான வியூகத்தையும் மோதலை மேற்கொள்ளக் கூடியவர் லக்வி. தற்போது தெஹ்ரி இ தலிபானுக்கு எதிராக பாகிஸ்தான் வியூகம் வகுத்து வரும் நிலையில் லக்வி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
அத்துடன் மட்டுமல்ல லக்வியின் விடுதலை மூலம் காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாத இயக்கம் இன்னும் முழுவீச்சில் தீவிரமாக தாக்குதலை நடத்த வாய்ப்பிருக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் தெஹ்ரிக் இ தலிபான் தானை ஒழிப்பதுதான் தற்போது முக்கியமாக இருந்தாலும் ஜம்மு காஷ்மீரிலும் வாலாட்டவே செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications