துபாயில் நடைபெற்ற ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபாய் மண்டலம் மற்றும் லத்திஃபா மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் 18.04.2014 அன்று மண்டல தலைவர் முஹம்மது அலி தலைமையிலும், முகாம் பொறுப்பாளர் சகோ.அஷ்ரப்அலி (TNTJ துபாய் மண்டல செயலாளர்)அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

காலை 8.00 மணிக்கு ரத்ததான முகாம் துவங்கியது. முகாமில் 198 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தது தனி சிறப்பு.
மண்டல இணைச் செயலாளர் நவாஸ் தலைமையில் தொண்டர் அணியினர் சிறப்பான முறையில் கள பணியாற்றினர்.

இதில் தேய்ரா, சோனாப்பூர், அல்கூஸ், ஜபல் அலி, சத்வா, ஹோர் அல் அன்ஸ், பர்துபாய், காராமா, கிஸஸ் ஆகிய பகுதிகளில் இருந்து பலர் முகாமில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications