ஆற்றில் குளித்ததால் பாதிப்பு.. மூளையை தின்னும் அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி பரிதாபப் பலி!
நாக்லேரியா பொலேரி அமீபாவால் தாக்கப்பட்ட அமெரிக்கச் சிறுமி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
டெக்சாஸ்: அமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் 10 வயது சிறுமி லில்லி மே அவண்ட். இவர் தனது குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு பிராசோஸ் ஆற்றுப்படுகைக்கு சுற்றுலா சென்றார்.

லில்லி ஆற்றில் நீச்சலடித்து விளையாடிய போது நாக்லேரியா பொலேரி (Naegleria fowleri) எனும் அமீபாவால் தாக்கப்பட்டார். நல்ல நீரில் இருக்கும் இந்த வகை அமீபாக்கள் நேரடியாக மூளையை தாக்கக் கூடியவை.
இதையடுத்து அந்த சிறுமி போர்ட் வொர்த்தில் உள்ள குக் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து லில்லி படித்து வந்த பள்ளி, தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது. லில்லிக்கு இரங்கல் தெரிவித்துள்ள அப்பள்ளி நிர்வாகம், 'லில்லியின் இழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளது. லில்லி ஒரு புத்திசாலி மாணவி மட்டுமல்லாமல், அனைவரிடமும் நட்பாக பழகக் கூடியவர் என்றும் பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லில்லியின் மரணத்திற்கு காரணமான கொடிய வகை அமீபா, மூக்கின் வழியாக நமது உடலுக்குள் நுழையக்கூடியது. மூக்கு வழியாக உள்ளே நுழைந்து, ஒருவரின் மூளை திசுக்களை தாக்கி அழிக்கும். அமெரிக்காவில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும், 34 பேர் இந்த வகை அமீபா தாக்குதலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications