மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
ராணுவ ஆட்சி கவிழ்ப்பைக் கண்டித்து மியானமரில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டு ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இருப்பினும், மக்கள் போராட்டம் தொடர்ந்தே வருகிறது.

மக்கள் போராட்டம்
மியான்மர் நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமான யாங்கோன் நகரில் இன்று பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு அதிகளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். முதலில் போராட்டக்காரர்களைக் கலைக்க அவர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை போலீசார் வீசியுள்ளனர்.

திடீர் துப்பாக்கிச் சூடு
அதன் பின்னர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தபட்சம் 18 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல 30க்கும் மேற்பட்டோர் இதில் காயமடைந்துள்ளனர். இத்தகவலை ஐநா மனித உரிமை ஆணையம் உறுதி செய்துள்ளது.

மனித உரிமைகள் ஆணையம்
இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையம், அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மியான்மர் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். மியான்மரில் கடந்த சில வாரங்களாகவே மக்கள் போராட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முறைகேடு
கடந்தாண்டு மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே சிலரைக் கைது செய்துள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதை ஆட்சி கழிப்பு என்று அழைக்கக் கூடாது என்றும் அந்நாட்டு ராணுவம் எச்சரித்துள்ளது. விரைவில் முறையான தேர்தல் நடத்தப்படும் என்றும் அதன் பின்னர் ஆட்சி திருப்பியளிக்கப்படும் என்றும் ராணுவம் கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications