9 குழந்தைகளுடன் ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்ற 3 யு.கே. சகோதரிகள்
லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் தங்களின் 9 குழந்தைகளுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் சகோதரிகள் கதீஜா தாவூத்(34), சுக்ரா தாவூத்(34) மற்றும் ஜொஹ்ரா தாவூத்(33). வெஸ்ட் யார்க்ஷயரில் உள்ள பிராட்போர்டில் வசிந்து வந்த சகோதரிகள் தங்களின் 3 முதல் 15 வயது வரையிலான 9 குழந்தைகளுடன் கடந்த மே மாதம் 28ம் தேதி புனித பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியாவுக்கு சென்றனர்.

அவர்கள் கடந்த 11ம் தேதி இங்கிலாந்திற்கு திரும்பி வந்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வரவில்லை. சகோதரிகள் தங்கள் குழந்தைகளுடன் மதினாவில் இருந்து விமானம் மூலம் இஸ்தான்புல் சென்றுள்ளனர். அந்த பெண்களின் சகோதரர் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
அதனால் சகோதரிகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர சிரியா சென்றுள்ளனர் என்று அவர்களின் கணவன்கள் சந்தேகிக்கின்றனர். குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளது தான் அவர்களின் முக்கிய கவலையாக உள்ளது.
இது குறித்து குழந்தைகளின் தந்தைகளின் வழக்கறிஞர் பலால் கான் கூறுகையில்,
சகோதரிகள் சிரியாவுக்கு 9 குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளது அவர்களின் தந்தைகளுக்கு கவலையாக உள்ளது. அவர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தந்தைமார்கள் தவிக்கிறார்கள். தங்களின் குழந்தைகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக் கூடாது என்று நினைக்கின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications