வங்கதேச மருத்துவமனையில் 24 மணிநேரத்தில் 10 குழந்தைகள், 22 பேர் மர்ம மரணம்
டாக்கா: வங்கதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் 24 மணிநேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உள்பட 32 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர்.
வங்கதேசத்தின் வடகிழக்கு பகுகுதியான சில்லட் நகரில் உள்ளது உஸ்மானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. அந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி 24 மணிநேரத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உள்பட 32 பேர் மர்ம மரணம் அடைந்தனர். அந்த 10 குழந்தைகளும் 12 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துள்ளன. இறந்த குழந்தைகளில் 5 பிறந்த அன்றே இறந்துள்ளன.

இது குறித்து மாநில சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜாஹித் மாலிக் கூறுகையில்,
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த கூடுதல் செயலாளர் தலைமையிலான மூவர் குழுவை அரசு அமைத்துள்ளது. ஏதாவது தவறு நடந்திருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.
மர்ம மரணம் குறித்து உஸ்மானி மருத்துவக் கல்லாரி மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அன்று பிறந்த குழந்தைகள் பிரசவத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகள், மூச்சுத் திணறல் மற்றும் நிமோனியாவால் பலியானதாக மருத்துவமனை உயர் அதிகாரி அப்துஸ் ஸலாம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 24 மணிநேரத்திற்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் 32 பேர் பலியானதாக அவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications