ஆப்கானில் மீண்டும் நிலநடுக்கம்... பாக், வட இந்தியா நகரங்கள் குலுங்கின

Subscribe to Oneindia Tamil

காபூல்/ இஸ்லாமாபாத்/டெல்லி: ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வட இந்திய பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு அண்மைக்காலமாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்றும் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.

5.8-magnitude earthquake strikes Afghanistan, tremors felt in North India

இது ரிக்டரில் 5.8 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இதன் எதிரொலியாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர் பக்துன்குவா, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், டெல்லி, நொய்டா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 300 பேர் பலியாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+