பாகிஸ்தானில் மேலும் 5 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை... ராணுவ நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத் : பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு மனி உயிர்களை பலிகொண்ட தீவிரவாதிகளில் மேலும் 5 பேருக்கு பாகிஸ்தான் ராணுவம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவார் ராணுவப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமான 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டடிருந்தது.

death sentence

இந்நிலையில் லாகூரில் வழக்கறிஞரை கொன்றது, குவெட்டாவில் தாக்குதல் நடத்தியது, காராச்சியின் குதாப் நகரில் காவல் துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பண்ணு சிறையை தகர்த்த வழக்கு, கைபர் பகுதியில் பகுதியில் பெண்கள் பள்ளி தாக்குதல் நடத்தியது ஆகியவை குறித்து ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பளித்த ராணுவ தலைமை ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகள் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 5 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனையும், ஒரு தீவிரவாதிக்கு ஆயுள் தண்டனையும் வித்து ரஹீல் ஷரீஃப் உத்தரவிட்டார். இதனை ராணுவ செய்தித் தொடர்பாளர் அசிம் பஜ்வா உறுதி செய்துள்ளார்.

பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் தாலிபான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 148 குழந்தைகள் உள்பட 151 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலையடுத்து, மரண தண்டனையை தடையை நீக்கி பாகிஸ்தான் நாடாளுமன்றம் சட்டம் நிறைவேற்றியது.

இதையடுத்து, அன்று முதல் இதுவரை 200க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+