குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா.. 51 பேர் பாதிப்பு.. தென்கொரியாவில் அதிர்ச்சி
சியோல்: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் தொன்கொரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளால் பாராட்டை பெற்ற நாடு தென்கொரியா. சீனா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட போது, அடுத்த சில வாரங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு தென்கொரியா.
ஆனால் அதிகப்படியான சோதனை, அதிவிரைவில் சோதனை முடிவுகளை அறிதல், தனிமைப்படுத்தல், சமூக விலகல் போன்றவற்றால் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
10000 பேர் பாதிப்பு
தற்போதைய நிலையில் தென்கொரியாவில் சுமார் 10000 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இது மிக குறைவான சராரிசரியாகும். இந்நிலையில் தென்கொரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த 51 பேர் குணடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

10000 பேர் பாதிப்பு
தற்போதைய நிலையில் தென்கொரியாவில் சுமார் 10000 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். இது மிக குறைவான சராசரியாகும். இந்நிலையில் தென்கொரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டாயிகு நகரில் கொரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 51 பேர் குணமடைந்துவிட்டதாக அறிவித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீண்டும் கொரோனா
எனினும் அவர்களை தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து வந்தனர். இந்நிலையில் 51 பேருக்கும் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வியக்கும் விஞ்ஞானிகள்
இதுபற்றி தென்கொரியா மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இது வியப்பான விஷயம். மனிதனின் உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் உள்ளன. இதில் ஏதோ ஒரு செல்லில் பிரிக்க முடியாத அளவுக்கு கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டுள்ளது. குணம் அடைந்தவர்களையும் மீண்டும் தாக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.

மீண்டும் பாதிக்க வாய்ப்பு இல்லை
ஆனால் இந்த தகவலை இங்கிலாந்து ஈஸ்ட் ஆங்கிலியா பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்த்துறை பேராசிரியர் பால் ஹண்ட் கூறுகையில், இதில் பரிசோதனை முறைகள் தவறாக கையாளப்பட்டு இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டதாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை குணம் அடைந்த ஒருவர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பே இல்லை" என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications