உணவின்றி கிர்கிஸ்தானில் சிக்கி தவிக்கும் மருத்துவ மாணவர்கள்.. விரைந்து மீட்க கண்ணீருடன் கோரிக்கை
கிர்கிஸ்தான்: கிர்கிஸ்தானில் தங்கி மருத்துவம் படித்து வரும் 800 மாணவர்கள் கொரோனா லாக்வுடனால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். தங்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
கிர்கிஸ்தானில் பிஸ்ஹெக் நகரில் உள்ள 4 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் கிர்கிஸ்தானில் லாக்டவுன் அமலில் உள்ளது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ளோர் வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் மீட்கப்பட்டு வருகிறார்கள். அது போல் கிர்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டன. இவை கொச்சி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன.

கிர்கிஸ்தான்
சென்னைக்கு இயக்கப்படவில்லை. இதனால் கிர்கிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப முடியாத நிலையில் மாணவர்கள் இருக்கிறார்கள். உணவு, தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை என புகார் அளிக்கிறார்கள். மேலும் மாஸ்க், கையுறை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

மீட்க கோரிக்கை
எங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோவில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அந்த வீடியோவில் அவர்கள் கூறுகையில், கிர்கிஸ்தானில் 800 பேர் தவித்து வருகிறோம். இந்திய தூதரகத்தை அணுகினால் தமிழக அரசிடம் பேசுமாறு கூறுகிறார்கள். எனவே சென்னை அல்லது கோவை அல்லது திருச்சிக்கு நேரடியாக கிர்கிஸ்தானிலிருந்து விமானங்களை இயக்கி எங்களை மீட்க வேண்டும்.

கண்ணீர் கோரிக்கை
தற்போதைக்கு தமிழக அரசு மட்டுமே எங்கள் நம்பிக்கையாகும். நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகங்களும் கைவிரித்து விட்டன. எனவே எங்களை எப்படியாவது மீட்டு எங்கள் பெற்றோருடன் சேர்க்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தொழிலாளர்கள்
இது போல் அரபு நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் தங்களை தமிழகத்திற்கு மீட்க கோரிக்கை விடுத்துள்ளார்கள். உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. நிறுவனத்தில் உள்ளவர்கள் எங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கேட்டால் தாக்குகிறார்கள் என அரபு நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அழுது கொண்டே கூறினார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications