நைட்ஷிப்டில் வேலை அதிகமாக இருக்காம்.. 10 நோயாளிகளை விஷஊசி போட்டு கொன்ற நர்ஸ்.. தண்டனையை பாருங்க
பெர்லின்: ஜெர்மனி மருத்துவமனையில் நைட்ஷிப்டில் வேலை அதிகமாக இருப்பதாக கூறி நர்ஸ் ஒருவர் 10 பேரை கொன்று மேலும் 27 பேரை கொல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த நர்ஸ்க்கு தண்டனையை அறிவித்துள்ளது. ஜெர்மனியை உலுக்கிய இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
ஜெர்மனின் மேற்கு பகுதியில் வூர்சிலன் என்ற இடம் உள்ளது. இங்குள்ள மருத்துவமனையில் ஆண் ஒருவர் நர்சாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2007 ம் ஆண்டில் நர்சிங் படிப்பு மற்றும் பயிற்சியை முடித்தார். அதன்பிறகு வெவ்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தார்.

கடந்த 2020ம் ஆண்டில் வூர்சிலன் நகரில் உள்ள மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். மருத்துவமனையில் பணி என்பது ஷிப்ட் அடிப்படையில் இருக்கும். அந்த ஆண் நர்ஸ்க்கு இரவு பணியும் வந்தது.
பொதுவாக இரவு பணியின்போது நள்ளிரவில் குறைந்த அளவில் மட்டுமே ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் அவருக்கு இரவு பணி என்பது பிடிக்காமல் இருந்துள்ளது. மேலும் சில நாட்களில் அதிகமான நோயாளிகள் இருக்கும்போது இரவு பணி கடினமானதாக மாறிவிடும். தொடர்ந்து வேலை இருந்து கொண்டே இருந்துள்ளது.
இதனால் அவர் தனது பணி சுமையை குறைக் வேண்டும் என்பதற்காக சிகிச்சை பெற்று வரும் 10 பேரை கொன்றுள்ளார். 2023 டிசம்பர் மாதம் முதல் 2024 மே மாதம் வரை அவர் தனது இரவு பணியின்போது முதியவர்களுக்கு பெயின் கில்லர் மற்றும் மயக்க மருந்து தொடர்பான ஊசிகளை போட்டு கொன்றுள்ளார். மேலும் 27 பேரை கொல்ல முயன்றுள்ளார்.
இந்த புகாரை தொடர்ந்து அவரை போலீசார் கடந்த 2024 மே மாதம் கைது செய்தனர். இரவு பணியின் சுமையை குறைப்பதற்காக ஆண் நர்ஸ் ஒருவர் 10 பேரை ஊசிபோட்டு கொன்ற சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நர்ஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.
இதுபற்றி ஆச்சின் நகரில் உள்ள நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛நர்ஸ்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் 14 ஆண்டுகள் வரை சிறையில் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். இந்த காலக்கட்டத்தில் அவரால் சிறையில் இருந்து வெளியே வர முடியாது. அதேவேளையில் 15வது ஆண்டில் அவர் சிறையில் இருந்து வெளியே வரலாம். அதுவும் அவரது நடத்தையை பொறுத்தே அமையும்'' என்று கூறியுள்ளார்.
ஜெர்மனில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் நர்ஸாக பணியாற்றிய நீல்ஸ் ஹெகல் மொத்தம் 85 நோயாளிகளை கொன்றார். இவர் 1999 முதல் 2005 காலக்கட்டத்தில் இந்த கொலைகளை செய்தார். தனது பராமரிப்பில் இருந்த நோயாளிகளுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கான மருந்துகளை கொடுத்து கொடூரமாக கொன்றார். அந்த வழக்கில் நீல்ஸ் ஹெகல் கைது செய்யப்பட்டதோடு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications