தரையிறங்கும் போது விபத்து.. மூன்றாக உடைந்த விமானம்.. இஸ்தான்புல்லில் அதிர்ச்சி.. ஒருவர் பலி!
இஸ்தான்புல்லில் இன்று காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
Recommended Video
இஸ்தான்புல்: இஸ்தான்புல்லில் இன்று காலை விமானம் ஒன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். 157 பேர் இதில் படுகாயம் அடைந்தனர்.
துருக்கியில் இருக்கும் இஸ்மிர் விமான நிலையத்தில் இருந்து இஸ்தான்புல்லில் உள்ள சபீனா விமான நிலையம் நோக்கி இன்று அதிகாலை பேகாசஸ் விமானம் புறப்பட்டுள்ளது. காலை 6.30 மணி அளவில் அந்த விமானம் சபீனா விமான நிலையத்திற்கு வந்துள்ளது.
ஆனால் இஸ்தான்புல்லில் இன்று மோசமான வானிலை நிலவியது. இரவு முழுக்க பெய்த மழை காரணமாக அங்கு ஓடுதளம் மிகவும் ஈரமாக காணப்பட்டது.

என்ன மேகம்
அதேபோல் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் இன்று காலை தரையிறங்கிய விமானங்கள் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டுதான் தரையிறங்கியது. இந்த நிலையில் அந்த பேகாசஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது.

என்ன விமானம்
அதேபோல் ஓடுதளமும் எங்கே இருக்கிறது என்று விமானிகளால் சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் ஓடுதளத்தின் தொடக்கத்திலேயே விமானம் மொத்தமாக இறங்கியது. இதனால் விமானம் தரையில் மிக வேகமாக மோதியது, மோதிய வேகத்தில் விமானம் இழுத்து செல்லப்பட்டது. விமானத்தின் வால் பகுதி இதனால் தீ பிடித்து ஏறிய தொடங்கியது.

உடைந்து நொறுங்கியது
இந்த விமான விபத்தை அடுத்து, விமானம் மொத்தமாக மூன்று பாகங்களாக உடைந்து நொறுங்கியது. முன்பக்கம், நடுப்பக்கம் , பின்பக்கம் என்று மூன்று பாகங்களாக இந்த விமானம் உடைந்து நொறுங்கியது. இந்த உடைந்த பாகங்களில் இருந்து பயணிகள் பலர் வெளியே குதித்து ஓடி வந்தனர். அதேபோல் அவசர ஜன்னல் வழியாகவும் அதிக எண்ணிக்கையில் பயணிகள் வெளியே வந்தனர்.
|
மரணம்
தற்போது அங்கு மீட்பு பணிகள் மொத்தமாக முடியவில்லை. இன்னும் 5 பேர் வரை விமானத்தில் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த விமானத்தில் மொத்தம் 177 பேர் பயணம் செய்தனர். இதில் 155 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒருவர் மட்டும் பலியாகி விட்டார். 6 பேருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. 5 பேருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications