ஈரானியப் படத்துக்காக பாலஸ்தீன இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ ஆர் ரஹ்மான்
மஜித் மஜிதி இயக்கும் புதிய ஈரானியப் படத்துக்கு இசையமைக்கும் ஏ ஆர் ரஹ்மான், இதற்காக புகழ்பெற்ற பாலஸ்தீனிய இசைக் குழுவுடன் கைகோர்த்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்', ‘த கலர் ஆப் பாரடைஸ்', த சாங் ஆப் ஸ்பாரோ' உள்ளிட்ட படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. இந்தப் படங்களுக்காக நூற்றுக்கணக்கான விருதுகளைக் குவித்தவர் மஜிதி.
அன்புதான் இந்தப் படங்களின் அடிநாதமாக அமைந்து, பார்ப்பவர்களைப் பரவசமடைய வைத்தது.
முதல் முறையாக மஜித் மஜிதியுடன் இணைகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் இந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஈரானிலேயே தங்கியுள்ளார்.
இப்படத்திற்காக உலக புகழ் பெற்ற பாலஸ்தீன இசை குழுவினரான லி ட்ரையோ ஜோப்ரானுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றி வருகிறார்.
ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருதுகளை வென்று உலக புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் பங்களிப்பு இந்தப் படத்தை புதிய தளத்துக்கு எடுத்துச் செல்லும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் மஜித் மஜிதி.












Click it and Unblock the Notifications