தாய்லாந்தில் 200 பேருக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு - சுகாதாரத்துறை அமைச்சகம்
பாங்காங்: தாய்லாந்தில் 200 பேர் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 200 பேர் தாய்லாந்து நாட்டில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தில் ஜிக்கா வைரசால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜிக்கா வைரஸ் பாதிப்பு குறித்து, அந்நாட்டு அரசு முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ''இதுவரை 200 பேர் ஜிக்கா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்திற்கு சராசரியாக 20 பேருக்கு ஜிக்கா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படுகிறது'' என தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 27-ம் தேதி சிங்கப்பூரில் முதன்முறையாக ஜிக்கா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் தொடங்கி இதுவரை சுமார் 300 பேர் சிங்கப்பூர் நாட்டில் ஜிக்கா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளும் ஜிக்கா வைரஸ் தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications