கிளிநொச்சி: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய யாழ். மாணவர் விபத்தில் பலி!
கிளிநொச்சியில் தமிழக ஜல்லிக்கட்டு புரட்சிக்கான ஆதரவு போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுவிட்டு திரும்பிய யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் சாலை விபத்தில் பலியானார்.
யாழ்ப்பாணம்: தமிழக ஜல்லிக்கட்டு புரட்சிக்கு ஆதரவாக இலங்கையின் கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் சுப்பிரமணியம் முரளிதரன் சாலை விபத்தி சிக்கி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக இளைஞர்கள் ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு உரிமையை மீட்கும் புரட்சியில் குதித்துள்ளனர். இந்தப் புரட்சி தமிழகத்தை மட்டுமல்ல உலகநாடுகளில் வாழும் தமிழர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஈழத் தமிழர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கிளிநொச்சியில் கந்தசுவாமி கோவில் முன்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் ஊடக துறை மாணவர் சுப்பிரமணியன் முரளிதரனும் (வயது 24) கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தியபடி ஜல்லிக்கட்டுக்காக முழக்கம் எழுப்பினார். பின்னர் சுப்பிரமணியம் முரளிதரன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கிளிநொச்சியை அடுத்த புளியம்பொக்கனை என்ற இடத்தில் சுப்பிரமணியம் முரளிதரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி ஒன்று மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியம் முரளிதரன் உயிரிழந்தார்.
இச்சம்பவம் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications