தீண்டாமை + இன பாகுபாடு.. அதானி குழுமத்தை அதிரவைத்த ஆஸ்திரேலிய பழங்குடியினர்.. பரபரப்பு புகார்
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவின் அதானி குழும பணியாளர்கள் மீது இன பாகுபாடு காட்டியதாக பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதானி குழுமம் சார்பில் நம்நாட்டில் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் முதலீடு பெற்ற புகார் பற்றி எரியும் நிலையில் பழங்குடியினர் கூறிய இனபாகுபாடு புகார் தற்போது பரபரப்பை கூட்டி உள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் அதானி. இவர் நம் நாட்டின் 2வது பெரிய பணக்காரராக உள்ளார். இவர் துறைமுகம், எரிசக்தி, நிலக்கரி உள்பட பல்வேறு துறை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபகாலமாக அதானி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதோடு அமெரிக்கா நீதிமன்றம் கவுதம் அதானிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது நம்நாட்டில் சூரிய ஒளி (சோலார்) மின்சார ஒப்பந்தம் பெற அதானி நிறுவனம் ரூ.2,200 கோடியை பல்வேறு வகைகளில் லஞ்சமாக கொடுத்துள்ளார். இதனை மறைந்தது அமெரிக்காவில் இருந்து முதலீடுகளையும் அதானி பெற்றுள்ளதாக நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 7 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதோடு அதானியிடம் இருந்து பணம் பெற்றவர்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அதானி மீது இன்னொரு புகார் வழங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது அதானி குழுமம் மீது இனவெறி சர்ச்சை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சார்பில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. கார்மிசெல் நிலக்கரி சுரங்கத்தில் அதானி குழுமத்தை சேர்ந்த பரிவாஸ் மைனிங் மற்றும் ரிசோர்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சுரங்கத்தின் அருகே தான் இனபாகுபாடு புகார் எழுந்துள்ளது.
அதாவது இந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பழங்குடியின மக்களிடம் தான் அதானி குழும பணியாளர்கள் இன பாகுபாடு காண்பித்ததாக கூறப்படுகிறது. அதாவது அந்த நிலக்கரி சுரங்கத்தின் அருகே நீரூற்றுகள் உள்ளன. தீண்டாமை வகையில் இந்த நீரூற்றுகளை பயன்படுத்த விடாமல் அதானி குழுமத்தினர் பழங்குடியின மக்களை தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதானி குழுமத்தினர் எப்படி தடுத்து இன பாகுபாடு காட்டினர் என்பது பற்றி புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் சார்பில் குயின்ன்ஸ்லாந்தில் உள்ள நாகானா யார்பைன் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ காலசார கஸ்டடியன்ஸ் ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இந்த புகார் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications