ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு- கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி
பாரிஸ்: மொரீஷியஸில் இருந்து பாரிஸ் வந்தடைந்த ஏர் பிரான்ஸ் விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் பிரான்ஸை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
459 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் மொரீஷியஸில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிஸ் நகருக்கு புறப்பட்டு சென்ற விமானத்தில், சந்தேகத்திற்கு இடமான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவ்விமானம் கென்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகளை இறக்கிவிட்ட பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அந்த மர்மப்பொருள் காகித அட்டை மற்றும் சில காகிதத் தாள்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், விமானத்தில் போலி வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் அதில் பயணம் செய்த 58 வயது மதிக்கத்தக்க முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பிரான்ஸ் நாட்டில் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள ரியூனியன் பகுதியை சேர்ந்த அந்த நபர், போலீஸ் அதிரடிப்படையில் சில ஆண்டுகள் பணியாற்றியதாக விசாரணையில் தெரியவந்தது. சுமார் 12 மணிநேர விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பாரிஸ் தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அங்கு எச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications