பிற மத பெண்களை முஸ்லிம் ஆண்கள் பலாத்காரம் செய்யலாம்: இஸ்லாமிய பேராசிரியை கருத்தால் சர்ச்சை
கெய்ரோ: முஸ்லீம் அல்லாத பெண்களை பலாத்காரம் செய்து அவர்களை இழிவுபடுத்த முஸ்லீம் ஆண்களுக்கு அல்லாஹ் அனுமதி அளித்திருப்பதாக இஸ்லாமிய பேராசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பிரபல அல் அசார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சுவாத் சாலே. அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில்,
அடிமைப் பெண்களுடன் உறவு கொள்ள அல்லாஹ் முஸ்லீம் ஆண்களுக்கு அனுமதி அளித்துள்ளார். முஸ்லீம்களுக்கும், இஸ்ரேல் போன்ற அவர்களின் எதிரிகளுக்கும் இடையே போர் நடக்கையில் செக்ஸ் காரணத்திற்காக முஸ்லீம் ஆண்கள் பெண்களை அடிமையாக வைத்துக் கொள்ளலாம்.
இஸ்ரேலிய பெண்களை அடிமைகளாக்கி உறவு செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பெண் போர் கைதிகள் உங்களுக்கு சொந்தமானவர்கள். அவர்களை இழிவுபடுத்த அவர்கள் ராணுவ தளபதியின் சொத்தாகிவிடுகிறார்கள். அவர்களுடன் ஆண்கள் உறவு கொள்ளலாம் என்றார்.
சுவாதின் பேட்டியை பார்த்த பல இஸ்லாமியர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் இஸ்லாத்தின் பெயரில் தவறான பிரச்சாரம் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications