ரஷ்ய குழந்தையை அல்லாஹ் கொலை செய்ய உத்தரவிட்டார்: ஆயா பேட்டி

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: 4 வயது குழந்தையை அல்லாஹ் கொலை செய்யுமாறு உத்தரவிட்டதாக மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட குழந்தையின் தலையுடன் நடமாடிய ஆயா தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தானை சேர்ந்த கியுல்செஹ்ரா போபோகுலோவா(39) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு வீட்டில் 4 வயது பெண் குழந்தையை கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவர் குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொலை செய்து தலையை கத்தியால் துண்டாக வெட்டி அதை எடுத்துக் கொண்டு மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்றார்.

Allah ordered to kill the child: Says babysitter

மெட்ரோ நிலையத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் நின்று கொண்டு நான் ஒரு தீவிரவாதி என்று அவர் கத்தினார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

குழந்தையை கொலை செய்தீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில், அல்லாஹ் தான் அந்த குழந்தையை கொலை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றார்.

போபோகுலோவா தனக்கு மனநல பாதிப்பு இருப்பதை மறைத்து அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+