அமெரிக்கா - சவுதி இடையே போர் அச்சத்தை உருவாக்கும் ஒரு ஆப்பிள் வாட்ச்.. அதிர வைக்கும் பின்னணி!
பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.
இஸ்தான்புல்: பிரபல பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போன பிரச்சனையில், ஒரு ஆப்பிள் வாட்ச் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது. இது அமெரிக்கா, சவுதி இடையே போரை உருவாக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
சவுதியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கசோக்கி காணாமல் போய் இதோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. சவுதியை சேர்ந்த ஜமால் கசோக்கி உலகின் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்களின் ஒருவர்.
கடந்த சில வருடங்களாக இவர் சவுதிக்கு எதிராக எழுதி வந்தார். முக்கியமாக சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக எழுதி வந்தார்.

காணாமல் போனார்
இவர் கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கி வந்துள்ளார். அங்கு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்கு இவர் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். அதுகுறித்த ஆவணங்களை கொடுக்க வேண்டும் என்று இவர் அங்கு சென்றுள்ளார். ஆனால் உள்ளே போனவர் வெளியே வரவேயில்லை.

கொலை செய்துவிட்டனரா
அதன்பின் அவர் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. இவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் செய்திகள் வருகிறது. சவுதியை சேர்ந்த இவரை சவுதி அரசாங்கமே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகிறது. சவுதி அரசு அனுப்பிய கொலைகார டீம் ஒன்று இவரை கொன்றுள்ளதாக துருக்கி பத்திரிகைகள் எழுதி வருகிறது. இதற்கு ஆதாரமாக பல சிசிடிவி காட்சிகளையும் வெளியே விட்டுள்ளது. இவரை 15க்கும் அதிகமான உலக நாடுகள் தேடுகிறது.

அவரின் ஆப்பிள் வாட்ச்
இந்த நிலையில் இதில் நிறைய சந்தேகங்கள் நிலவி வரும் நிலையில், ஜமால் கசோக்கி கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் இதில் முக்கிய சாட்சியமாக மாறியுள்ளது. ஜமால் கசோக்கி அந்த தூதரகத்துக்கு உள்ளே நடந்த எல்லா பிரச்சனைகளையும் தனது ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்துள்ளார். அங்கு நடந்த கொடுமைகளை ரெக்கார்ட் செய்துள்ளார்.

முக்கிய ஆதாரம்
இந்த ஆப்பிள் வாட்ச் அவரது ஆப்பிள் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போன் அந்த கட்டிடத்திற்கு வெளியில் நின்ற அவரது காதலியிடம் இருந்துள்ளது. ஆப்பிள் வாட்சில் ரெக்கார்ட் செய்யப்பட்ட விஷயங்கள் இந்த ஆப்பிள் போனுக்கும் வந்து இருக்கிறது. அதன்படி அவர் கொடுமைபடுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதிவானது
அந்த ஆப்பிள் போனிற்கு வந்த ரெக்கார்ட்களில், ஜமால் கசோக்கி அழுவதும், கத்துவதும் பதிவாகி உள்ளது. அவரை சிலர் அடிக்கும் சத்தமும் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக ஜமால் கசோக்கி 90 சதவிகிதம் கொலை செய்யப்பட்டு இருக்கவே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பதற்றம்
இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரசுதான் இந்த கொலையை செய்திருக்கும் என்று உலக நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா சவுதி மீது கடும் கோபத்தில் உள்ளது. இது அமெரிக்காவிற்கும் சவுதிக்கும் இடையில் போர் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications