அடுத்தடுத்து.. 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் என்ன ஆகும்.. இதோ வெளியானது ரிசல்ட்..!
2 தடுப்பூசிகளை அடுத்தடுத்து செலுத்தியதன் ஆய்வு வெளியாகி உள்ளது
மாஸ்கோ: அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தி கொண்டால் 85 சதவீதம் பேருக் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து, சிகிச்சை இல்லாவிட்டாலும் தடுப்பூசிகளே பெருமளவு ஆதரவாக இருந்து வருகின்றன.. அந்த வகையில், உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன..
ஆனால், எந்தவொரு தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் 2வது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. உலக மக்களும் இதையேதான் பின்பற்றி வருகின்றனர்.

அஸ்ட்ரோ ஜெனேகா
அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், 2வது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் செலுத்தி கொள்ளலாமா? அவ்வாறு செலுத்தினால் என்ன விளைவு ஏற்படும் என்ற ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதானிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியானது, கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video

இந்தியா
இந்த தடுப்பூசிதான் இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டில் இருக்கிறது.. இதுதான் உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்த்து சிறப்பாக செயல்படக்கூடியதாகும்.. அதேபோல, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி என்ற தடுப்பூசியின் இன்னொரு வடிவம்தான் ஸ்புட்னிக் லைட் என்பதாகும்.. இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய 2 தடுப்பூசிகளையும் 2 தவணைகளாக, அதுவும் அடுத்தடுத்து செலுத்திக் கொண்டால் எப்படி இருக்கும் என்ற ஆய்வு நடத்தப்பட்டது..

100 பேர்
ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் அஜர்பைஜான் நாட்டில் இந்த ஆய்வு கடந்த பிப்ரவரில் மேற்கொள்ளப்பட்டது.. இதில் கிட்டத்தட்ட 100 தன்னார்வ தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.. அதன்படி, அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி செலுத்தப்பட்டது.. பிறகு 29 நாட்கள் கழித்து ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன...

ரிசல்ட்
இதில், முதலில் பங்கேற்ற 20 தன்னார்வ தொண்டர்களிடம் இருந்து ஆய்வு முடிவுகள் சேகரிக்கப்பட்டன. ரிசல்ட் என்னவென்றால், டோஸ் செலுத்தப்பட்ட 57வது நாட்களில் 85 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்துள்ளதாம்.. இந்த ஆய்வினை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்திலும் மேற்கண்ட 2 தடுப்பூசிகளை பயன்படுத்தி ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications