பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் ஓட்டுநர் உள்பட 13 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குயிட்டா-ராவல்பிண்டிக்கு இடையே ஜாபர் எக்ஸ்பிரஸ் எனும் ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில் இன்று போலன் மாவட்டத்துக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

At least 13 people were killed train derails in Pakistan

இந்த விபத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் துணை ஓட்டுநர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து படுகாயமடைந்தவர்கள் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் அவரச கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று குவெட்டா நகரின் புறநகர் பகுதியில் ஜாபர் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தபோது ரயில் தண்டவாளத்துக்கே அருகே குண்டு வெடித்ததில் ரயில்வே ஊழியர்கள் 4 பேர் பலியாயினர் 11 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பலூசிஸ்தான் உள்துறை செயலாளர் அக்பர் ஹுசைன் துரானி கூறுகையில், ரயிலில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் தடம் புரண்டது என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+