பயங்கர கொந்தளிப்பு.. நடுக்கடலில் கப்பல் இரண்டாக நொறுங்கி மூழ்கியது.. 27 பேர் மாயம்.. ஹாங்காங் சோகம்
கடலில் கப்பல் மூழ்கியதில் 27 பேர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
பெய்ஜிங்: ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியதில், 27 பேர் மாயமாகி உள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது.
சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியாக ஹாங்காங் உள்ளது.. இதனிடையே, ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது.
Recommended Video
அந்த கப்பலில் 30 பேர் பயணித்தனர்... ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்திற்கு உள்பட கடல் பகுதியில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமான புயல் தாக்கியது.

சாபா புயல்
இந்த புயல் தாக்கியதில் கப்பல் இரண்டாக நொறுங்கியது.. இதனால், கப்பலில் பயணித்த 30 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் மட்டும உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், கப்பலில் பயணித்த எஞ்சிய 27 பேரின் நிலை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை..

எங்கே அவர்கள்
அதுகுறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால், காணாமல் போன 27 பேரையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம், தென் சீனக் கடல் பகுதியில், சாபா புயல் காற்று வீசியதால், கப்பலே மூழ்கும் நிலைமை ஆகிவிட்டது.. ஹாங்காங் நகரத்தின் தென் மேற்கு பகுதியில் 300 கிமீ தொலைவில் இந்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

அதிகாரிகள்
மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால், அந்த கப்பல் எந்த நாட்டை சேந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துள்ளனர்.. மாயமானவர்கள் நடுக்கடலில் மூழ்கி உள்ளதால், அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ஹாங்க் அரசின் விமான மீட்பு குழு தெரிவித்துள்ளது.

கப்பல்
விபத்து நடந்ததுமே, மூழ்கியவர்களை மீட்க விமானங்கள் விரைந்துள்ளன.. ஆனால், அதற்குள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்கிறார்கள்.. விபத்து நடந்த இடத்தில் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், 10 மீட்டர் உயர அலைகள் வீசியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.. தொடர்ந்து மோசமான வானிலையே நிலவுவதாக சொல்கிறார்கள்.. அந்த கப்பலில் இருந்தவர்கள் அனைவருமே பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications