கவனக் குறைவால் 200 நோயாளிகளைக் ‘கொன்ற’ ஆஸி. மருத்துவமனை... மன்னிப்பு கோரியது!

Subscribe to Oneindia Tamil

சிட்னி: ஆஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று தவறுதலாக 200 நோயாளிகளை இறந்து விட்டதாக அறிவித்த சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தனது இம்மாபெரும் தவறுக்கு அம்மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் மெல்போர்ன். இக்குள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக இறந்தவர்கள் என அறிவித்துவிட்டது.

சிகிச்சைப் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் கவனக்குறைவாக இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டு விட்டதாக அம்மருத்துவமனையின் சுகாதாரப்பிரிவு இயக்குநர் தெரிவித்துள்ளார்/

பின்னர், தங்களது தவறு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அனைத்து நோயாளிகளிடமும் மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியது. மேலும் இந்தத் தவறு குறித்து அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர் என்றும், இதனால் நோயாளிகளின் கவனிப்பு பாதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை மூலம் தெரிவித்தது.

ஆனபோதும், ஆரோக்கியம் பெற்று வீடு திரும்பிய நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகளில் இறந்து விட்டதாக எழுதப்பட்டிருந்தது ஏற்றுக்கொள்ளமுடியாத தவறு என்று தெரிவித்துள்ளது ஆஸ்திரேலிய மருத்துவ சங்கம்.

இத்தவறை இழைத்த ஊழியர்களுக்கு தக்க தண்டனை உண்டு என மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஊழியர்களின் அதிகப்படியான பணிச் சுமையே இத்தகைய தவறிற்குக் காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+