ஆஸி.யில் அடைக்கலமான ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்த ஒப்பந்தம்!
ஆஸ்திரேலியாவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடைக்கலமான ஈழத் தமிழர் உள்ளிட்ட அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்தும் ஒப்பந்தம் உறுதியாகி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்கள், ஆப்கான், ஈரான் நாட்டவர்கள், ஆப்பிரிக்கர்கள் என பலரும் சட்டவிரோதமாக மீன்பிடி படகுகள் மூலமாக உயிரை பணயம் வைத்து அகதிகளாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவது தொடர்ந்து வருகிறது.

இந்த ஆபத்தான கடல் பயணத்தில் உயிரிழந்தவர்களும் ஏராளம். தமிழகத்தில் ஈழத் தமிழர் அகதி முகாம்களில் இருந்து இப்படி வெளியேறி ஆஸ்திரேலியாவுக்கு சென்றவர்களும் உண்டு.
இப்படி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அகதிகள் அனைவரும் பாபுவாநியூ கினியாவின் நவரு தீவு மற்றும் மனுஸ் தீவு ஆகியவற்றில் உள்ள தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த அகதிகளில் ஒரு பகுதியினரை அமெரிக்காவில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் டர்ன்புல் கூறியுள்ளார்.
ஆனால் எத்தனை பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் என்ற விவரம் அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான்கெர்ரி, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகதிகள் குடியமர்த்துவது என்பது பரிசீலிக்கப்படும் என்றார்.
இருப்பினும் இந்த ஒப்பந்தம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆஸ்திரேலிய அரசு குறிப்பிடவில்லை. அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 லட்சம் பேரை வெளியேற்றுவேன் என அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இப்புதிய ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications