பால்கொடுப்பது அவமானமா?...நாடாளுமன்றத்தில் பாலூட்டிக் கொண்டே பேசிய செனட் உறுப்பினர்!
பொது இடம் என்பதால் குழந்தைக்கு பால் கொடுப்பதை ஏன் நிறுத்த வேண்டும் என்பதற்கு ரோல்மாடலாக மாறியுள்ளார் ஆஸ்திரேலிய செனட் உறுப்பினர் லாரிசா வாட்டர்ஸ்
கன்பரா : குழந்தைக்கு பாலூட்டுவதாகவே இருந்தாலும் பொது இடம் என்றால் ஒரு வித தயக்கத்துடனே இருக்கும் பெண்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டே பேசி அசத்தியுள்ளார் பெண் அரசியல்வாதி.
பொதுவாகவே மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து பாலூட்டுவதற்கு தயக்கம் காட்டியே வருகின்றனர். இதற்கு ஏராளமான முன் உதாரணங்கள் உள்ளன. ஆனால் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் இதில் விதிவிலக்கு.

ஜூன் 22ம் தேதி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற வாட்டர்ஸ் தன்னுடைய 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சபாநாயகர் வாட்டர்ஸை பேச அழைக்க சிறிதும் பதற்றமோ தயக்கமோ இல்லாமல் எழுந்த அவர் குழந்தைக்கு பாலூட்டியவாரே தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்து அதை நிறைவேற்றவும் செய்துள்ளார்.
வாட்டர்ஸ் போன்று அரசியலில் முக்கிய பங்காற்றுபவர் இது போன்று துணிச்சலான செயலை செய்துள்ளதை பெண்கள் தங்களுக்கான உத்வேகமாக நினைக்க வேண்டியுள்ளது. பொது இடமாக இருந்தால் என்ன? யாரோ ஒருவரை நினைத்து நம் பிள்ளைக்கு பால் கொடுப்பதை தவிர்க்க வேண்டுமா என்றும் வாட்டர்ஸ் கேள்வி எழுப்புகிறார்.
நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெற்றுள்ளார் இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், மே 10ம் தேதி நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போதும் இதே போன்று நாடாளுமன்றத்தில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டிய சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டது.
கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என்று அந்த நாடு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பெண்களின் பங்களிப்பை நாடாளுமன்ற செனட் சபையில் அதிகரிக்கச் செய்வதே இதன் முக்கியத்துவம் என்று இந்த சட்டம் அமல்படத்தப்பட்டது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications