பாகிஸ்தானின் சூப்பர் மாடல் அயன் அலி கைது: எதற்கு தெரியுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னணி சூப்பர் மாடலான அயன் அலி அளவுக்கு அதிகமான பணத்துடன் நாட்டை விட்டு கிளம்ப முயன்றபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அயன் அலி. அந்நாட்டின் முன்னணி சூப்பர் மாடல். 24 வயதாகும் அவர் செல்போன் முதல் ஐஸ் க்ரீம் வரை பலதரபட்ட பிராண்டுகளுக்கு விளம்பரம் செய்துவிட்டார். அண்மை காலமாக பாகிஸ்தானில் நடக்கும் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் அவர் தான் முக்கிய மாடலாக உள்ளார்.

16 வயதில் மாடலிங் செய்யத் துவங்கிய அவர் விரைவிலேயே பாகிஸ்தானின் முன்னணி மாடலாக ஆனார். பிரபஞ்ச அழகிப் போட்டியில் பாகிஸ்தான் சார்பில் அயன் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி அவர் தனது கைப்பையில் ரூ.3 கோடியே 11 லட்சத்துடன் இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். விமானத்தில் ஏறும் முன்பு பயணிகளின் உடைமைகள் சோதிக்கப்பட்டபோது அயனிடம் அதிகமான அளவில் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு ரூ.6.22 லட்சம் ரொக்கம் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி உள்ளது.
விதிமுறைகளை மீறி அயன் பணத்தை கடத்துவதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள பிரதான சிறையான ஆதியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு எந்த ஒரு சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.6.22 லட்சம் தான் எடுத்துச் செல்ல அனுமதி இருப்பது தனக்கு தெரியாது என்று அயன் தெரிவித்துள்ளார். அயன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன் 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications