இந்தியாவை சீண்டிய வங்கதேசம்.. ரூ.180 கோடி ஆர்டரை ரத்து செய்த முகமது யூனுஸ்.. இதுதான் பதிலடியா?

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதற்கு உரிய முறையில் நம் நாடும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டுடன் பாதுகாப்பு துறை நிறுவனத்துடன் போடப்பட்டு இருந்த ரூ.180.25 கோடி ஒப்பந்தத்தை வங்கதேசம் திடீரென்று ரத்து செய்துள்ளது. இதன்மூலம் மீண்டும் நம்மை வங்கதேசம் சீண்ட தொடங்கி உள்ளது.

வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையானதால் ஷேக் ஹசீனா நம்நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

bangladesh-cancels-rs-180-cr-defence-contract-with-india-after-our-nation-withdrawing-transshipment

முகமது யூனுஸ் பாகிஸ்தான், சீனா ஆதரவாளர் என்று சொல்லப்பட்டது. அதன்படியே அவர் சீனா, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடிக்க தொடங்கினார். இதனால் இந்தியா - வங்கதேசம் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது நம் நாட்டை மீண்டும் சீண்டியுள்ளார் முகமது யூனுஸ். அதாவது நம் நாட்டின் பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் கொல்கத்தாவில் கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பெயர் கார்டன் ரீச் ஷஇப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமெிடெட் என்பதாகும். சுருக்கமாக ஜிஆர்எஸ்இ என்பார்கள்.

இந்த நிறுவனத்துடன் ரூ.180.25 கோடி மதிப்பில் இழுவை கப்பலுக்கான ஒப்பந்தத்தை வங்கதேசம் போட்டு இருந்தது. இந்த ஒப்பந்தத்தை தான் தற்போது வங்கதேசம் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியரிங் லிமெிடெட் நிறுவனம், ‛‛வங்கதேசம் அரசு போட்ட இருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நம் நாட்டுக்கு வங்கதேசம் கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது. அதாவது கொரோனா பரவலின்போது நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை பயன்படுத்தி வங்கதேசம் தனது பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் சீனாவுக்கு சென்ற முகமது யூனுஸ் நம் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து பேசியிருந்தார். இதனால் கோபமான மத்திய அரசு நம் நாட்டின் துறைமுகம், விமான நிலையங்களை வங்கதேசத்தின் சரக்கு பயன்பாட்டுக்கு வழங்கும் அனுமதியை அதிரடியாக ரத்து செய்தது. இது வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பிட்ட சரக்கை நம் நாட்டின் வழியாக நேரடியாக வங்கதேசம் ஏற்றுமதி செய்யும்போது அது குறைந்தது. இப்போது நம் நாடு அனுமதி மறுத்துள்ளதால் வங்கதேசம் தனது கடல் மார்க்கம் மற்றும் விமான நிலையங்களை நம்பியே பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டிய நிலை உருவாகி உள்ளது. வங்கதேசத்தை பொறுத்தவரை விமான நிலையங்களில் சரக்கு முனையங்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இது வங்கதேசத்துக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இந்த அனுமதி ரத்துக்கு பதிலடியாக தான் வங்கதேசம் நம் நாட்டின் பாதுகாப்பு துறையுடன் போட்ட கடல் இழுவை கப்பலுக்கான ரூ.180.25 கோடி ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+