வங்கதேசத்தில் படகு கவிழ்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு
டாக்கா: வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் நேற்று சுமார் 150 பயணிகளுடன் சென்ற படகு சரக்கு கப்பல்களை இழுத்து செல்லும் இழுவை படகு மோதி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாணிக்கஞ்ச் மாவட்டம் தவ்லத்டியா-பட்டுரியா பகுதியின் அருகே வந்த போது எதிரே வந்த சரக்கு படகு மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 66 பேர் பலியானதாகவும், சுமார் 50 பேர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீந்திவந்து கரை சேர்ந்ததாக தெரிவித்துள்ளனர். கைப்பற்ற 66 உடல்களில் குழந்தைகளும், பெண்களும்தான் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீரில் மூழ்கிய சுமார் 100 பேரை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வங்கதேச கப்பல் துறை அமைச்சர் சாஜன் கான், இந்த படகு விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் படகு ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications