ஸ்பெயினின் ராணியாகிறார் முன்னாள் பத்திரிக்கையாளரான லெடிஜியா
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டின் ராணியாக பதவியேற்க உள்ளார் முன்னாள் பத்திரிக்கையாளராக இருந்த பெண் ஒருவர்.
மன்னராட்சி நடைபெறும் ஸ்பெயின் நாட்டின் புதிய அரசராக இளவரசர் பிலிப் பதவியேற்க உள்ள நிலையில் முன்னாள் பத்திரிகையாளரான அவர் மனைவி லெடிஜியா ராணியாகப் போகிறார்.
கடந்த 69 ஆண்டுகளாக ஸ்பெயின் நாட்டை முதலாம் ஜூவான் கார்லோஸ் ஆண்டு வருகிறார். இவர் மனைவி சோபியா 1975 முதல் மகாராணியாக உள்ளார். இளையதலைமுறையிடம் ஆட்சிப் பொறுப்பை தரும் வகையில் அரசர் பதவியில் இருந்து விலகி தன் மகனும், இளவரசருமான பிலிப்பிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்க கார்லோஸ் முடிவு செய்துள்ளார்.
வரும் 18 இல் பிலிப் அரசராக முடிசூட்டப்படுகிறார்.பிலிப்பின் மனைவி லெடிஜியா பிரபல பத்திரிகைகள் மற்றும் டிவிக்களில் செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். கடந்த 2002 இல் இருவரும் சந்தித்தனர், 2004 இல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications