இஸ்லாமை இழிவுபடுத்தி கட்டுரை.. பிளாக்கருக்கு நாளை பொது இடத்தில் 1000 கசையடிகள்!
ரியாத்: சவுதி அரேபியாவில் இஸ்லாம் மதத்தை இழிவு படுத்தும் விதமாக இணையத்தில் எழுதி வந்ததாக கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் இளைஞருக்கு நாளை 1000 கசையடி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த கசையடி தண்டனை நிறைவேற்றம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி என்ற இளைஞர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களைப் பதிவு செய்ததாக கடந்த 2012ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 கசையடிகளும் தண்டனையாக விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார் ரைப். அவரது கசையடி தண்டனை நாளை மதியம் ஜெட்டா மசூதிக்கு வெளியே நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கசையடி நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினர் பங்கேற்க வேண்டும் என ரைப் விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், ஒரே நாளில் ரைப்பிற்கு 1000 கசையடிகள் தரப்படாது என்றும், நாளை 50 கசையடிகளும், அதனைத் தொடர்ந்து வரும் 50 வாரங்களில் மீதி கசையடிகளும் பிரித்து நிறைவேற்றப்படும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications