சார்லி ஹெப்டோ வழக்கை விசாரித்த போலீஸ் உயர் அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
பாரீஸ்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் பற்றி விசாரணை நடத்தி வந்த போலீஸ் உயர் அதிகாரி தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதுவும் தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் அவர் தற்கொலை செய்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை அலுவலகத்திற்குள் கடந்த புதன்கிழமை புகுந்த 2 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் பற்றி ஹெல்ரிக் ப்ரெடோ(45) என்ற போலீஸ் உயர் அதிகாரி விசாரணை நடத்தினார். அவர் தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் அதாவது கடந்த புதன்கிழமை இரவு 1 மணிக்கு தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் சார்லி ஹெப்டோ தாக்குதலில் பலியான ஒருவரின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். ஹெல்ரிக் 1997ம் ஆண்டு போலீஸ் அதிகாரியாக தனது பணியை துவங்கினார். அவர் துவக்கத்தில் வெர்சைல்ஸில் பணிபுரிந்துள்ளார். பின்னர் தனது சொந்த ஊரான லிமோக்ஸுக்கு மாற்றலாகி வந்துள்ளார். 2012ம் ஆண்டு அவர் அப்பகுதியின் துணை டைரக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஹெல்ரிக் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருக்கு குழந்தைகளும் இல்லை. அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய குவாச்சி சகோதரர்கள் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications