வலுக்கட்டாயமாக பள்ளிக் குழந்தைகளிடம் ரத்ததானம்... சீனாவில் 7 பேர் கைது
பெய்ஜிங்: சீனாவில் பள்ளிக் குழந்தைகளிடம் வலுக்கட்டாயமாக ரத்த தானம் பெற்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் 18 வயது முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மட்டுமே ரத்ததானம் செய்ய வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சட்டவிரோதக் கும்பலொன்று 10 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளிடம் கடந்த ஏழு மாதத்திற்கும் மேலாக ரத்த தானம் பெற்று வந்துள்ளனர்.

இந்தக் கும்பல் சம்பந்தப்பட்ட குழந்தைகளை அடித்தும், உதைத்தும் வற்புறுத்தி ரத்த தானம் செய்ய வைத்துள்ளனர். மேலும், தானமாகப் பெறப்பட்ட ரத்தத்தை அதிக விலைக்கு விற்று வந்த அந்தக் கும்பல் ரத்த தானம் செய்தவர்கள் பற்றிய போலியான சான்றிதழ்களை தந்து வந்துள்ளனர்.
பெற்றோர் மூலம் வெளிச்சத்திற்கு வந்த இந்தக் கொடூரம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications