கொரோனாவால் வெளியான உண்மை.. சீனாவை அம்பலப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள்
பெய்ஜிங்: இத்தனை காலமாக உலகிற்கு எவ்வளவு பெரிய தீங்கை சீனா இழைத்து வந்துள்ளது என்பதை செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் தற்போது, அம்பலமாக்கி உள்ளன.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே அல்லாடிக் கொண்டிருக்கிறது. இது முதலில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. இதையடுத்து அந்த பிராந்தியம் முழுக்க சீல் வைக்கப்பட்டு உள்ளே, யாரும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் யாரையும் விடவில்லை.
இந்த நிலையில்தான், தலைநகர் பீஜிங், தொழில்துறை நகரமான ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து, தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகக் கூடிய நச்சுப்புகை மிகமிகக் குறைந்து விட்டது.

நிறைய மாசு
அதிக அளவில் கார்பன்-டை-ஆக்சைடை சீனா வெளியிட்டு வருவதாக அமெரிக்க இதற்கு முன்பாக குற்றஞ்சாட்டி இருந்த போதெல்லாம் அதை மறுத்து வந்தது சீன அரசு. சில ஆய்வுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடின் மொத்த அளவை விடவும் சீனா அதிகமாக வெளியிடுவதாக குற்றம்சாட்டி வந்தனர்.

புகை குறைவு
இத்தனை நாட்களாக இதை சீனா மறுத்து வந்த நிலையில், இதை உண்மை என்று கூறும் அளவுக்கான ஒரு செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த படம் 2019 டிசம்பர் 20ஆம் தேதி மற்றும் இந்த நோய் பாதிப்பு உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஆகிய இரு நாட்களில் எடுக்கப்பட்டது.

இரு படங்கள்
இந்த இரு நாட்களிலும், சீனாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைடு எந்த அளவுக்கு மாறுபட்டு இருக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. தற்போது அங்கு புகைமூட்டம் இல்லாமல் தெளிவான நிலை காணப்படுகிறது. ஆனால் டிசம்பர் மாதத்தில் புகை மிக அதிகமாக, செயற்கைக்கோள் படத்தில், சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது.
|
இயல்பு நிலை
இந்த இரு படங்களையும் பார்க்கும்போது சீனாவில் எந்த அளவு தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் புரிகிறது. அதேநேரம் புகை வெளியிடவில்லை என்று பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதும் உறுதியாகி உள்ளது. சீனாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா நிலை
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் சீனாவிலும், இத்தாலியிலும் காற்று மாசு அளவு வெகுவாகக் குறைந்தது போலவே, அமெரிக்காவிலும் நடந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சென்டினல் -5 பி செயற்கைக்கோளின் டேட்டாவை ஆதாரமாக கொண்டு, வெளியாகியுள்ள படங்கள், நியூயார்க், சிகாகோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் வளிமண்டலத்தில் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு குறைந்துள்ளது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications