ஜப்பான் உளவாளியாக செயல்பட்டாரா சீனத் தூதர்... மவுனம் காக்கும் சீனா, ஜப்பான்!
பெய்ஜிங்: ஜப்பான் உளவாளியாக செயல்பட்டதால் ஐஸ்லாந்துக்கான சீன தூதர் அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டார் என ஊடகங்களில் வெளியான தகவல் தொடர்பாக பதிலளிக்க சீனா மறுத்துள்ளது.
ஐஸ்லேந்து நாட்டிற்கான சீனத் தூதராக இருந்தவர் மா ஜிசெங்க். இவர் கடந்த 2004 - 2008ம் ஆண்டுகளில் டோக்கியோவில் உள்ள சீன தூதரகத்தில் பணி புரிந்த போது ஜப்பான் உளவாளியாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக இந்தாண்டுத் தொடக்கத்தில் சீன அரசு மாவையும், அவரது மனைவியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் சீன நாளிதழ் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. பின்னர் அச்செய்தி சீன நாட்டு இணைய ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக வெளியானது. பின்னர் காரணம் தெரிவிக்கப்படாமல் அவற்றில் சில செய்திகள் அழிக்கப்பட்டு விட்டன.
இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீயிடம் கேட்கப் பட்டதற்கு, ‘அப்படியா, இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது' என மழுப்பலாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் அரசிடம் இது தொடர்பாக ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, ‘ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்துத் தான் இந்த விவகாரத்தைத் தெரிந்து கொண்டோம். இது சீன விவகாரம். ஆதலால் இது தொடர்பாக நாங்கள் கருத்துத் தெரிவிக்க இயலாது' என பதிலளித்துள்ளது.
உண்மை நிலவரத்தை அறிய மா மற்றும் அவரது மனைவியை தொடர்பு கொள்ள முயன்ற போது பயனளிக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, ஐஸ்லாந்து சீன தூதரக அதிகாரி இது தொடர்பாக கூறுகையில், ‘கடந்த மே மாதம், சில தனிப்பட்ட காரணங்களால் சீனத் தூதர் மா மீண்டும் தனது பதவிக்கு திரும்ப மாட்டார்' என மட்டும் செய்தி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications