சீனாவில் குப்பை மேட்டில் 3 கிலோ தங்க நகைகளை கண்டெடுத்த தம்பதி
பெய்ஜிங்: சீனாவில் குப்பை பொறுக்கும் இருவர் குப்பை மேட்டில் ரூ. 83 லட்சத்து 25 ஆயிரத்து 291 மதிப்புள்ள தங்க நகைகளை கண்டெடுத்துள்ளனர்.
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சாங்-சுன் பகுதியில் ஜோ ஜிங்சியா மற்றும் அவரது கணவர் லியூ யூஹுவா ஆகியோர் குப்பை பொறுக்கியபோது இரண்டு பெட்டிகளில் தங்க மோதிரங்கள் மற்றும் நெக்லஸ் இருப்பதை பார்த்தனர்.
ரூ. 83 லட்சத்து 25 ஆயிரத்து 291 மதிப்புள்ள 3 கிலோ தங்க நகைகளை அவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில் தங்க நகைகளை காணவில்லை என்று சென் என்ற நகைக்கடை டீலர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த நகைகள் சாங்-சுன்னில் இருந்து ஷென்ஜென்னுக்கு அனுப்பி வைக்கப்பட்டபோது தொலைந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நகையை தேடிய போலீசாருக்கு அது லியூ தம்பதியிடம் இருப்பது தெரிந்து அவர்களை தேடிச் சென்றனர். அந்த தம்பதியிடம் இருந்து நகையை வாங்கி அதை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.