உங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா.. படுத்தே விட்டார் வார்னர்
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணை கேப்டன் டேவிட் வார்னர், பந்தை சேதப்படுத்தி கோல்மால் செய்ததில், தனது பங்கிற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வார்னர் இதுகுறித்து கூறுகையில், "நான் என் பங்கிற்கு மன்னிப்பு கேட்டு பொறுப்பேற்கிறேன். இது விளையாட்டையும் அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை நான் புரிந்து கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
மேலும் அவர் மனம் திறந்து கூறியுள்ளதாவது:

சிட்னிக்கே போறேம்ப்பா
"நான் தற்போது சிட்னிக்கு செல்கிறேன், கிரிக்கெட்டை சேதப்படுத்தும் அளவுக்கு தவறுகள் செய்யப்பட்டுள்ளன, என் பங்கிற்கு நான் பொறுப்பேற்று, இந்த விளையாட்டையும் அதன் ரசிகர்களுக்கும் ஏற்படுத்திய துன்பத்தை உணர்ந்து கொள்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே காதலித்த விளையாட்டுக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டேன்.

குடும்பத்தோடு நேரம்
ஒரு ஆழ்ந்த சுவாசம் எடுத்துக்கொண்டு, என் குடும்பத்துடன், நண்பர்களிடமும், ஒரு சில நாட்கள் செலவிட உள்ளேன்" என்றும் வார்னர் கூறியுள்ளார். வார்னருக்கு மனைவியும், குழந்தையும் உள்ள நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வார்னர் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் 12 மாதங்களுக்கு அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்களில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படவுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) அறிவித்துள்ளது.

பந்தை சேதப்படுத்தினர்
கேப் டவுனில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியற்கு வார்னரும், ஸ்மித்தும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஓட்டம்
எலக்ட்ரானிக் நிறுவனம் எல்ஜி புதனன்று, வார்னரை தனது புதிய ஒப்பந்தத்தில் இணைப்பதில் இருந்து பின்வாங்கிக்கொண்டது, காலாவதியாகும் ஒரு விளம்பர ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில்லை என்று அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications