நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7,757 ஆக உயர்வு
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்று 7 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த 25ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் நேபாளத்தில் லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை இன்று 7 ஆயிரத்து 757 ஆக அதிகரித்துள்ளது. கூடுதலாக 16 ஆயிரத்து 390 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானோர் சிந்துபால் சவுக் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீட்பு பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் மீட்பு பணியில் பெரும்பகுதி முடிந்துவிட்டதாகக் கூறி வெளிநாட்டு குழுக்களை நாடு திரும்புமாறு நேபாள அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதையடுத்து நேற்று வரை இந்தியா உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த 600 பேர் நேபாளத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மீதமுள்ளவர்களும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு கிளம்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேபாள உள்துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியிருப்பதாவது,
பயங்கர நிலநடுக்கத்தால் 2 லட்சத்து 79 ஆயிரத்து 234 வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. மேலும் 2 லட்சத்து 37 ஆயிரத்து 68 வீடுகள் பாதி சேதம் அடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications